17th December 2021 17:40:14 Hours
அதிகாரிகளுக்கான தொழிலாண்மை மேம்பாட்டு கல்லூரி வெள்ளிக்கிழமை (17) இராணுவ போர் பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு அருகாமையில் புத்தலவில் அமைந்துள்ள 18 வது கெமுனு ஹேவா படையணியில் அதிகாரிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய உணவரை தளபதியவர்களால் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களின் அழைப்பின் பேரில் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக விருந்தக வளாகதத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
18 வது கெமுனு ஹேவா படையணியின் முகாமில் மேற்படி கட்டிடத்தை திறந்து வைக்கப்பதற்கு கடினமாக உழைத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய இராணுவ தளபதியவர்கள் அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துகொண்டார்.
இலங்கை சமிக்ஞை படையணியின் தளபதியும் தலைமை சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் மற்றும் அதிகாரிகள் தொழிலாண்மை மேம்பாட்டு கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.