16th December 2021 16:17:34 Hours
சீதாவக்கையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் படையணியின் 48 வது தளபதியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய புதன்கிழமை (15) அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பயிற்சி கண்காணிப்பாளர் பிரிகேடியர் எஸ்என் சமரவிக்கிரம அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டததோடு, படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ஜேடீசீஜீ ஜயசிங்க அவர்களின் கட்டளையின் கீழ் இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படை சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தின் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
பின்னர் படையினருக்கான உரையை நிகழ்த்திய தளபதி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளுக்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதோடு, நாட்டினதும் இராணுவத்தினதும் நற்பெயரை பாதுகாப்பதற்கான அர்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன்போது தனது பதவியேற்பின் நினைவம்சமாக தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த தளபதி சிப்பாய்களுக்கான விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டு தளபதிக்கு வாழ்த்துக்களை கூறிக்கொண்டனர். இந்நிகழ்வு உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி நடத்தப்பட்டது.