Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2021 16:10:28 Hours

படையினரால் 100 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 122 வது பிரிகேடின் கீழ் உள்ள 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய்களால் திஸ்ஸமஹாராம மற்றும் ஜுல்பல்லம கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள சியநெதுகமவில் வசிக்கும் அநாதாரவான குடும்பங்களுக்கு 100 நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

நன்கொடையாளரான திரு சனத் கழுபஹான அவர்களின் நிதி உதவியுடன் சனிக்கிழமை (04) மேற்படி பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

திரு சனத் கழுபஹான உதவியின் மூலம் 100 உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைதக்கும் திட்டம் 12வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 122 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீகேஎம்ஜேஎஸ்பீடபிள்யூ பல்லேகும்புர, 3 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி கட்டளை அதிகாரி உட்பட ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.