Header

Sri Lanka Army

Defender of the Nation

06th December 2021 08:39:40 Hours

ஓய்வுபெறும் இராணுவ பதவி நிலை பிரதானி இலங்கை இராணுவக் கல்லூரிக்கு விஜயம்

ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 34 வருடங்களுக்கு முன்னர் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்லூரியில் பயிலிளவல் அதிகாரியாக பயிற்சியை முடித்து 2வது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (03) தியத்தலாவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரிக்கு விஜயம் செய்தார்.

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவை தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் நலிந்த நியங்கொட மற்றும் கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்னர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 'அமைதி நினைவு தூபியில் போர்வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இராணுவக் கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரி உணவகம் மற்றும் எல்ல அருங்காட்சியகத்தையும் பார்வையிட்ட அவர் அங்கு அவரது புகைப் படத்தையும் பார்வையிட்டர். பின்னர் வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். இலங்கை இராணுவக் கல்லூரியின் தளபதி, மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவிற்கு விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் வழங்கியதுடன் வளாகத்தை விட்டு வெளியேறும் முன்னர் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் விஷேட குறிப்பையும் பதிவிட்டார்.