Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2021 05:07:37 Hours

இந்திய இராணுவத் தளபதி திருகோணமலைக்கு விஜயம்

இலங்கைக்கான ஐந்து நாள் நல்லெண்ண சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே மற்றும் அவரது பாரியார் உட்பட ஐந்து பேர் அடங்கிய குழுவினர் திருகோணமலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, திருமதி தனுஷா வீரசூரியவுடன் இணைந்து சீனக்குடா பகுதியிலுள்ள விமானப்படை தளத்திற்கு வருகைதந்த இந்திய இராணுவத் தளபதி மற்றும் அவரது பாரியாருக்கு வரவேற்பளித்தார்.

இதன்போது இந்திய இராணுவ தளபதி திருகோணமலை 4 வது மைல்கல் பகுதி மற்றும் முன்னாள் ஆளுநர் இல்லத்திற்கு சென்று 1987 ஆம் ஆண்டுகளில் புலிகள் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக இந்திய இராணுவ அமைதிகாக்கும் படைகளின் கீழ் இலங்கையின் பணியாற்றிய தனது நினைவுகளையும் மீட்டிப்பார்த்தார்.

திருகோணமலையிலிருந்து புறப்படுவதற்கு முன்பாக அவர் நிலாவெளி கடற்கரை ஹோட்டலுக்கு அவர் சென்றதோடு அங்கு இந்திய இராணுவத் தளபதியும் அவரது பாரியாரும், கிழக்கு தளபதியும் அவரது பாரியார் திருமதி தனுஷா வீரசூரிய அவர்களும் நினைவுச் சின்னங்களை பரிமாரிக்கொண்டனர். அத்தோடு அவர் அங்குள்ள விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.