02nd October 2021 21:17:09 Hours
இலங்கை இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவு முறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை இந்திய இராணுவ படையணிகள் கூட்டாக இணைந்து 8 ஆவது தடவையாக மேற்கொள்ளவிருக்கும் “மித்ர சக்தி” கூட்டு களப் பயிற்சிகளில் பங்கேற்கவிருக்கும் 120 இராணுவ சிப்பாய்கள் இன்று (2) மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மித்திர சக்தி பயிற்சிக்கான இந்திய படையின் கட்டளை அதிகாரி கேணல் பிரசாத் குமார் தலைமையிலான குழுவினை கூட்டு களப் பயிற்சிகளின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் பீஎன் கொடல்லவத்த இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கெப்டன் விகாஷ் சூட் அவர்களுடன் இணைந்து வரவேற்றார். ஒக்டோபர் 3 முதல் 17 வரை நடைபெறவுள்ள இந்தியா-இலங்கை இருதரப்பு கூட்டுப் பயிற்சி, நாடுகடந்த பயங்கரவாதம், செயல்பாட்டு திறன்கள், கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளை நடத்துதல், ஒருவருக்கொருவர் நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிகள் அம்பாறையிலுள்ள யுத்த பயிற்சி கல்லூரியில் விஜயபா காலாட் படையணி சிப்பாய்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த 120 இந்திய இராணுவப் படையினர் இரண்டு வார கால பயிற்சியில் பங்கேற்க உள்ளதோடு, பிராந்திய - பிரிவுகள் மட்டத்தில் சர்வதேச கிளர்ச்சிகளுக்கு எதிர் நடவடிக்கை, பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள் என்பன மேற்படி பயிற்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. இதில் இலங்கை இராணுவத்திலிருந்தும் 120 படையினர் பங்கேற்க உள்ளதோடு பயிற்சிகள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, 53 வது படைப்பிரிவு தளபதியும் பயிற்சி பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே மற்றும் பிரதி பயிற்சி பணிப்பாளர் ஆகியோரால் கண்காணிக்கப்படவுள்ளன.
பயிற்சியில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு இந்திய இராணுவத்தின் கேணல் பிரகாஷ் குமார் கட்டளையிட உள்ளதோடு, ஒக்டோபர் 17ம் திகதி பயிற்சியின் நிறைவில் கேணல் கிரிஷ் கோடியல், கேணல் ஜோன் டேனியல் மற்றும் இந்திய இராணுத்தின் பெண் அதிகாரி சுலேஜ் மீரா இறுதி கட்ட பயிற்சிகளை மதிப்பீடு செய்வர்.
இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு, புரிந்துணர்வு மற்றும் இரு சேவைகளுக்கும் இடையிலான உறவுகளின் பிணைப்புகளை வலுப்படுத்தல் என்பவற்றை நோக்கமாக கொண்டு இலங்கையிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடைபெறுகிறது.
மேற்படி கள பயிற்சிகள் உயிரியல் குமிழியின் அடிப்படையில் உரிய சுகாதார ஒழுங்கிவிதிகளை பின்பற்றி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.