01st October 2021 13:59:48 Hours
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் காலாட் படைகளின் பணிப்பாளரும் இலங்கை இராணுவ சிங்கப்படையணி உட்பட இராணுவத்திற்குள் பல்வேறு முக்கிய நியமனங்களை வகித்த மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார அவர்களை இராணுவ தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு இன்று (1) காலை அழைப்பித்திருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவருடைய சேவைக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரியுடனான சந்திப்பின் போது அவரது மூன்று தசாப்தகால இராணுவ சேவை, அர்பணிப்பு இலங்கை சிங்க படையினால் உருவாக்கப்பட்ட வலிமையான சிரேஸ்ட அதிகாரிகளுள் ஒருவராக திகழ்ந்தமை மற்றும் சிங்கப் படையணிக்கு சிறந்த தலைமையாக விளங்கியமை உள்ளிட்ட விடயங்களையும் நினைவுகூர்ந்தார்.
54 ஆவது படைப்பிரிவு தளபதியாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார, 2021 ஜூலை 30 அன்று காலாட் படைகளின் பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெற்றார்.
அதனையடுத்து ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரி தனது சேவைக்காலத்தில் தளபதியிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றி கூறியதோடு, தளபதியின் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்புக்கும் நன்றி தெரிவித்ததோடு ஓய்வுபெறுவதன் நினைவம்சமாக சிறப்பு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.