Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2021 09:50:01 Hours

கஜபா படையணியின் ஸ்தாபகருக்கு பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள்

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களுடன் இராணுவத்தின் புகழ்பெற்ற கஜபா படையணியின் ஸ்தாபக தந்தை, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன மற்றும் 8 பேர் 8 ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1992 அன்று ஊர்காவற்றுறை அராலிதுறையில் விடுதலைப் புலிகளின் அதிசக்தி வாய்ந்த குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரை தியாகம் செய்தார். அவரின் 29 ஆவது நினைவுத் தினத்திற்கமைவாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வழங்கப்பட்ட ஆலோசணைக்கமைய அனுராதபுரம் , கிரிபத்கொட உள்ளிட்ட பல இடங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய இன்று (8) அதிகாலை கஜபா படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குழுவினால் அனுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதி வளாகத்தில் உள்ள புனித (கிரி ஆஹார) பால்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது. அத்தோடு சாலியபுராவில் உள்ள கஜபா படையணியின் தலைமையகத்தில் மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களை நினைவுகூர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கஜபா படையணி தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம, சில சிரேஸ்ட அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதேபோல் படையணி தளபதியின் மேற்பார்வையின் கீழ் அனைத்து எட்டு பௌத்த (அட்டமஸ்தான) வழிபாட்டுத் தலங்களிலும் மேலும் சில மத நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு புனித ருவன்வெலி மகா சாய வளாகம் மற்றும் சில வழிப்பாட்டு இடங்களில் இன்று (8) மாலை மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் நினைவாக (கிலன்பச) தேநீர் தானமும் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் பிறப்பிடமான கிரிபத்கொடையிலுள்ள உள்ள அவரது உயரமான சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செய்யும் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன். இதில் பல உறவினர்கள், ஓய்வு பெற்ற படையினர் சேவையிலிருக்கும் படையினர் பொதுமக்கள் மற்றும் கஜபா படையணியின் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ரோயல் கல்லூரி பழைய மாணவராவார். 21 அக்டோபர் 1961 அன்று இலங்கை இராணுவத்தில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துகொண்டார். இந்திய இராணுவ அகாடமியில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டதன் பின்னர் அவர் நாடு திரும்பினார். 1 ஆகஸ்ட் 1963 இல் 2 வது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். இளம் 2 வது லெப்டினன்ட் வீஐவீகேஎம். விமலரத்ன பின்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் இணைக்கப்பட்டார். 1969 ஆம் ஆண்டில் அவர் கெமுனு ஹேவா படையில் இணைந்துகொண்டதோடு 2 வது (தொண்டர்) கெமுனு ஹேவா படையின் நிறைவேற்று அதிகாரியும் ஆனார். 1982 இல் தனது இராணுவ வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லை கடந்து மேஜர் விஜய விமலரத்ன 1 வது விஜயபாகு படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் லெப்டினன்ட் கேணல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். 1983 ஆம் ஆண்டில், 1 வது விஜயபாகு படையணி மற்றும் 1 வது ரஜரட்ட ரைபிள் படை இணைக்கப்பட்டு கஜபா படையணியின் 1 வது படை அவரது தலைமையில் 'ஒற்றுமையே பலம்' என்ற குறிக்கோளுடன் கீழ் உருவாக்கப்பட்டது.

ஓகஸ்ட் 1986 இல், அவர் கேணல் நிலைக்கு உயர்த்தப்பட்டார் அத்துடன் 1987 இல் 'ஆபரேஷன் லிபரேஷன்' எனும் விடுதலைக்கான நடவடிக்கையின் போது அவர் இலங்கை இராணுவ வரலாற்றில் ஆரம்பிக்கப்பட்ட முதல் மூன்று பிரிகேட் நடவடிக்கையில் 1 வது பிரிகேடிற்கு தளபதியாக செயற்பட்டார். ஜூலை 1988 இல் அவர் பிரிகேடியர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். 1990 இல் யாழ்ப்பாணக் கோட்டையிலும், 1991 இல் 'ஆபரேஷன் பலவேகய' நடவடிக்கையின் போது படைகளை மீட்பதில் அவர் பெரும் பங்கு வகித்தார். இலங்கை இராணுவத்திற்குள் உருவான மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன 08 ஆகஸ்ட் 1992 அன்று உயிர் நீத்தார் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹ மற்றும் சிலருடன் புலிகளின் குண்டு தாக்குதலுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை அராலித்துறையில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தனர். அவரது மறைவுக்குப் பிறகு, கஜபா ரெஜிமென்ட்டை இன்றைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்புகளுக்காக அவர் 'கஜபா படையின் தந்தை' என்று கருதப்படுகின்றார்.