05th August 2021 19:38:18 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் கீழுள்ள 112 வது பிரிகேட் படையினர் திங்கட்கிழமை (2) ராவண எல்லையின் வனப் பகுதியில் வேகமாக பரவிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய 112 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் மேற்படி நடவடிக்கை இடம்பெற்றது.