03rd August 2021 17:50:44 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 16 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால், மஹோயா தம்பிட்டிய பகுதியில் தேவையுள்ள கடும்பம் ஒன்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களினால் சனிக்கிழமை (31) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் வேண்டுகோளின்பிரகாரம், டீஎப்எல் கார்கோ தனியார் நிறுவத்தின் திரு நிஷாந்த லக்சிறி அவர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதிய வீட்டின் நிர்மாண பணிகள் 24 வது படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமஹேவா மற்றும் 241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக விமலரத்ன ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 16 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.