03rd August 2021 19:00:18 Hours
இலங்கை சிங்கப் படையின் மேஜர் ஜெனரல் ஜயநாத் பண்டார வெள்ளிக்கிழமை (30) இராணுவத் தலைமையகத்தில் காலாட்படை பணிப்பகத்தின் 19 வது பணிப்பாளர் நாயகமாக பதவியேற்றார்....
சுருக்கமான மத வழிபாடுகளுக்குப் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்ட காலாட்படை பணிப்பாளர் நாயகம் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் அவர் 54 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார்.
பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர் மேஜர் ஜெனரல் திலக் ஹங்கிலிபொல இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.