02nd August 2021 16:51:21 Hours
மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தில் 27 மார்ச் 2021 நடைப்பெற்ற 16 வது “கிராமத்துடன் சுமூகமான சந்திப்பு” வேலைத்திட்டத்தின் போது அதிமேதகு ஜானாதிபதி அவர்களினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கிணங்க, தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் 5 வது இலங்கை கள பொறியியல் படைப்பிரிவினர் கலுபோவிடியான வித்தியாலயத்தின் மீள் நிர்மாண பணிகளை முன்னெடுத்துவருகின்றனர் .
இத்திட்டம் தலைமை கள பொறியியலாளர் மற்றும் இலங்கை இராணுவ பொறியியல் பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் ஆலைப் பொறியியல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுருத்த செனவிரத்ன, மற்றும் 5 வது கள பொறியியல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.எஸ்.எல்.கே ரத்நாயக்க ஆகியோரது மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
இப்பகுதியில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுத்து பாடசாலை கட்டிடத்தை பாதுகாக்கும் நோக்கில் படிமுறை தளத்தின் கீழ் பாடசாலை கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க உள்ள படையினர் இராணுவ தளபதியின் அறிவுரைக்கமைய 01 ஜூன் 2021 அன்று இத்திட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.