27th July 2021 07:58:22 Hours
இராணுவ நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளரும், இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையின் படைத் தளபதியாகவும் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் சந்தன குமார ஹந்துன்முல்ல அவர்களை தனது அலுவலகத்துக்கு அழைப்பித்திருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இன்று (26) காலை ஓய்வு பெறுகின்றமையிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மிகவும் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சந்தன குமார ஹந்துண்முல்ல, தனது தொழில்முறை வாழ்க்கையின் போது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் முக்கிய நியமனங்களை வகித்துள்ளதோடு, மூன்று தசாப்தகால அர்ப்பணிப்பான சேவையை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தகதாகும்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடனான மேற்படி சந்திப்பின் போது ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சந்தன குமார ஹந்துன்முல்ல நினைவுகளை மீட்டிக்கொண்டதுனடன் எண்ணங்களையும் பகிரந்துகொண்டார். அதனையடுத்து ஓய்வின் பின்னர் முன்னெடுக்கவிருக்கும் செயற்பாடுகள் தொடர்பிலான திட்டமிடல் குறித்து தளபதி கேட்டறிந்துகொண்டார்.
சந்திப்பின் நிறைவில் ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரி தளபதியின் வழிகாட்டல்களுக்கும் பாராட்டுக்களுக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இராணுவத் தளபதியிடமிருந்து கிடைக்கப்பபெற்ற ஊக்குவிப்பு தொடர்பிலும் நினைவு கூர்ந்ததோடு இறுதியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடமிருந்து சிறப்பு நினைவுப் பரிசு ஒன்றினையும் பெற்றுக்கொண்டார்.