24th July 2021 16:00:42 Hours
செல்ல கதிர்காமம் பகுதியை ஊடரத்துச் செல்லும் மாணிக்க கங்கை கரை பகுதியை முழுமையாக தூய்மையாக்கும் பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழுள்ள 20 வது இலங்கை சிங்கப் படைணியின் 121 வது பிரிகேட் சிப்பாய்களால் முன்னெடுக்கப்பட்டன. கதிர்காகம் விகாரையின் எசல பெரஹெரவின் போது நடைபெறும் பாரம்பரிய நீர் வெட்டும் நிகழ்வினை முன்னிட்டு மேற்படி சிரமாதான பணிகள் வியாழக்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டன.
12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக மற்றும் 121 வது பிரிகேட் தளபதி மற்றும் 20 வது இலங்கை சிங்கப்படை கட்டளை அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.