13th July 2021 22:46:12 Hours
குருணாகலில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா ஓய்வு பெறுவதையிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி அப்படையணித் தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஓய்வு பெறும் அதிகாரி படையினருக்கான உரையின் போது அனைத்து அணியினரும் தமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி கூறியதோடு, அந்த அதரவை தொடர்ந்தும் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
அதனையடுத்து ஓய்வு பெற்றுச் செல்லும் படையணித் தளபதி படைப்பிரிவிலிருந்து வெளியேறும் போது அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், அணிவக்கு மரியாதையும் வழங்கப்பட்டது.