13th July 2021 22:42:04 Hours
இராணுவத்தின் நிதி உதவி மற்றும் மனிதவள உதவிகளுடன் இராணுவத்தின் முன்னோடி வீடமைப்பு திட்டத்தின் மூலம் அண்மையில் பயனடைந்த கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் வசிக்கும் திருமதி நகுலேஸ்வரி குகனேஸ்வரி என்பவர் படையினருக்கு நன்றிகளை தெரிவித்தார். இந்த திட்டமானது இராணுவத் தளபதியின் வழிகாட்டுலுக்கமைவாக முன்னெடுக்கப்பட்டது.
7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் மில்ரோய் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 7 இலங்கை சிங்கப்படையினரால் சொந்த வளங்களையும் நிதிகளையும் பயன்படுத்தி மேற்படி வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. குறித்த வீட்டை பயனாளிக்கு கையளிப்பதற்காக திங்கட்கிழமை (12) நடைபெற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க கலந்துகொண்டார்.
நல்லிணக்கம், நல்லெண்ணம் மற்றும் ஒருமைப்பாடு என்பவற்றை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டத்திற்கு, குறித்த பகுதியிலுள்ள உள்ள அரசாங்க அதிகாரிகளும் பாராட்டுகளை தெரிவித்தனர். குறித்த தினத்தில் மேற்படி குடும்பத்திற்கு அவசியமான வீட்டு தளபாடங்கள், உபகரணங்கள், உலர் உணவு பொதிகள், காய்கறி வகைகள், கற்றல் உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி கராச்சி பிரதேச செயலாளர், கோணாவில் கிராம சேவகர், 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர, 573 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும உட்பட பலரும் மேற்படி நிகழ்வில் சுகாதார ஒழுங்குமுறைகளின் படி கலந்துகொண்டனர்.