10th July 2021 18:25:58 Hours
ஒட்டுச்சுட்டானிலுள்ள 64 வது படைப்பிரிவின் 15 வது தளபதியாக பிரிகேடியர் உபுல் வீரகோண் புதன்கிழமை (7) பதவியேற்றார். இவருக்கு முன்பாக குறித்த பதவியை வகித்த மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன 30 வருடத்திற்கு மேற்பட்ட இராணுவ சேவைக் காலத்தை பூர்த்தி செய்த பின்னர் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த புதிய தளபதிக்கு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து 64 வது படைப்பிரிவின் தளபதியவர்கள் கேணல் பொது பதவி நிலை அதிகாரி மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோரினால் வரவேற்பளிக்கப்பட்டதுடன், மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் அவர் கைசாத்திட்டார்.
பின்னர் சம்பிரதாயங்களுக்கு அமைவாக புதிய தளபதியால் மரக்கன்று நாட்டி வைக்கப்பட்டதுடன், எதிர்கால நோக்கு தொடர்பிலும் கருத்து வெளியிட்டார். இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகளும் ஏனைய சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.