11th July 2021 07:10:20 Hours
பனாகொடையில் அமைந்துள்ள மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா வியாழக்கிழமை (8) மத ஆசிர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக நியமனம் பெற்ற மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி பதவி நிலை அதிகாரிகளால் அன்போடு வரவேற்கப்பட்டதுடன் அவர் காவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் கௌரவிக்கப்பட்டார்.
அதனையடுத்து தனது பதவியேற்பை குறிக்கும் வகையில் மரக் கன்று ஒன்றை நாட்டி வைத்த மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாப்பா செத் பிரித் பராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டதோடு, இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் பங்குபற்றினர்.
அதனையடுத்து அதனையடுத்து அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட தளபதி உரையொன்றினையும் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் 14 வது சமிக்ஞை படையணியின் படைத் தளபதி,61 வது படைப்பிரிவின் படைத் தளபதி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் நிலையத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் ஏனைய சிப்பாய்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேற்படி நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக அவர் 14 வது படைப்பிரிவின் படைத் தளபதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.