Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2021 18:16:37 Hours

51 வது படைப்பிரிவினரால் கேரள கஞ்சா மீட்பு

புலனாய்வுப் படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவு மற்றும் 17 கெமுனு ஹேவா படையினர் , பொலிஸாருடன் இணைந்து புங்குடுதீவு அல்லைத்தீவு பகுதியில் வியாழக்கிழமை (08) 6.5 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ளதுடன் நபரொருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக மேற்படி சந்தேக நபர் மீட்கப்பட்ட கஞ்சா தொகையுடன் புங்குடுதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.