09th July 2021 12:32:29 Hours
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு தரெக் முகமது அரிபுல் இஸ்லாம் வியாழக்கிழமை (8) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்தார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடனான தூதரின் நல்லுறவு சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான புத்துணர்ச்சியூட்டும் நட்பு , நீண்டகால உறவுகள் , முப்படை பணியாளர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை உள்ளடக்கிய இருதரப்பு புரிதல் , ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்று திட்டங்கள் போன்றவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
சந்திப்பில் ஜெனரல் ஷவேந்திர சில்வா, நாட்டில் கொவிட் -19 ஐ கட்டுப்பட்டு நிலைமைகள் தொடர்பாக விளக்கினார். இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதற்கு இராணுவத் தளபதி தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கை ஆயுதப் படைகளுக்கும் பங்களாதேஷின் சகாக்களுக்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்பு மற்றும் நட்பு உறவுகளை உறுதிப்படுத்தினார்.
சுமுகமான சந்திப்பின் நிறைவில் நினைவு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கொமன்டர் எம்.டி. ஷபியுல் பாரியும் அன்றைய சந்திப்பில் பங்குபற்றினார்.
உயர் ஸ்தானிகர் அவர்களை இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலில் இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் கொலோம்பதந்திரி வரவேற்றார்.