08th July 2021 12:19:44 Hours
இன்று காலை (09) இலங்கையில் 1,270 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 1,223 நபர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள். அடையாளம் காணப்பட்டவர்களில் அதிபடியாக கம்பஹா மாவட்டத்தில் 229 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், கலுத்துறை மாவட்டத்தில் 180 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 137 பேரும் பதிவாகியுள்ளனர். மீதி 677 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவுவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை (09) வரை இலங்கையில் மொத்தம் 269,945 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 162,541 பேர் புத்தாண்டுக்குப் பின்னர் இணங்காணப்பட்டவர்கள்.
இன்று (09) அதிகாலை 0600 மணி வரை 1,453 பேர் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று (09) ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 79 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,572 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று (09) அதிகாலை 0600 மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) 702 பேர் 24 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நிறைவின் பின் வீடு திரும்பினர்.
ஜூலை 7 ம் திகதி வரை இலங்கையில் கொவிட் 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆகும் அவர்களில் 11 பெண்களும் 19 ஆண்களும் 29 பேரும் உள்ளடங்குவர்.
களுத்துறை மாவட்டத்தில் அகலவததை பொலிஸ் பிரிவில் கெகுலாந்த தெற்கு கிராம சேவையாளர் பிம்புர பகுதி இன்று (09) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை (09) மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் பொலிஸ் பிரிவில் தலைமன்னார் இறங்குத்துறை மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவும் கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல பொலிஸ் பிரிவில் ஹிங்குல் ஓயா மற்றும் மாவத்த கிராம சேவையாளர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் விடுவிக்கப்பட்டுள்ளன.