07th July 2021 22:28:23 Hours
மட்டக்களப்பு லயன் கழகத்தின் நிதியுதவியில் 233 வது பிரிகேட் மற்றும் 6 வது கஜபா படையின் ஏற்பாட்டில் கூஞ்சங்குளம் கிராமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு 65 உலர் உணவு பொதிகள் சனிக்கிழமை (3) விநியோகிக்கப்பட்டன.
நாட்டில் கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்களைக் கருத்தில் கொண்டு 233 வது பிரிகேட்டின் தளபதி கேணல் வசந்த ஹேவகேயின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. லயன் கழக மட்டக்களப்பு கிளையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விநியோகத்தில் இணைந்திருந்தனர்.
23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த, 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே, , 6 கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, 233 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மற்றும் 6 வது கஜபா படையினரும் பங்கேற்றனர்.