07th July 2021 22:32:32 Hours
குட்டிகலயில் நிலைக்கொண்டுள்ள முதலாவது இலங்கை பொதுச் சேவைப் படையினர் ஞாயிற்றுக்கிழமை (04) பெருந்தோட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தங்கள் முகாம் வளாகத்திற்குள் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மஞ்சள் விதைகளை நட்டனர்.
பாதுகாப்புத் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் 'துரு மிதுரு நவரட்டக் ' திட்டத்திற்கு இணையாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் இலாபகரமானதுமாகும்.
இலங்கை பொதுச் சேவைப் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ஹல்துன்முல்ல அவர்களின் வழிக்காட்டலில் முதலாவது பொதுச் சேவைப் படையின் கட்டளை அதிகாரி கேணல் சி.எஸ். டெமுனி இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றார்.