06th July 2021 18:29:44 Hours
வெலிமட பிரதேச செயலகத்தின் ரஹங்கல கிராம சேவகர் பிரிவில் உள்ள வத்துக்கொட, ஹின்னரங்கொல்ல, பொரலந்த பிதேசத்தில் குழந்தைகளுடன் வசிக்கும் வீடற்ற குடும்பத்துக்கு இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி படையினரால் ஆவுஸ்ரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நிதியுதவியுடன் புதிய வீடு நிர்மாணிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இக் கட்டுமான பணிக்காக அடிகல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை 2 ஆம் திகதி பொரலந்தவில் இடம்பெற்றது. ஆவுஸ்ரேலியாவில் வசிக்கும் எம்.எஸ். நெத்மி குணசேகர மற்றும் திரு லஹிரு திசாநாயக்க அவர்களால் வத்துகொட, ஹின்னரங்கொல்ல, பொரலந்த பிதேசத்தில் இல. 62 F வசிக்கும் திரு எஸ்.சங்கர்கரு குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கும் பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தளபதியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன உட்பட இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பிரதி தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் வெலிமட பிரதேச சபையின் தலைவர் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.