06th July 2021 18:20:05 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட் படையினரால் மட்டகளப்பு மாவட்டத்தில் பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் 22 ஏழைக் குடும்பங்கள் மற்றும் 12 கோயில்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவு பொதிகள் வெள்ளிக்கிழமை 2 ஆம் திகதி வழங்கப்பட்டன.
இந்த நன்கொடையில் தலா ரூ 3500 / = பெறுமதியான பொதியில் அரிசி, பருப்பு, சோயா, தானியங்கள், மசாலா பொருட்கள், பால் மா, கறுவாடு உள்ளடங்கிய உணவு பொதிகள் 22 ஏழைக் குடும்பங்களுக்கும், மட்டக்களப்பு கஷ்ட பகுதிகளில் உள்ள 12 கோயில்களுக்கும் வழங்கப்பட்டன.
இந்த திட்டமானது 23 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீ்ழ் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, புன்னைக்குடா பகுதியில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களுக்கும் ஏராவூர் பகுதியில் உள்ள கோயில்களுக்கும் அந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.