Header

Sri Lanka Army

Defender of the Nation

01st July 2021 10:20:42 Hours

592 வது பிரிகேட் படையினரால் முல்லைத்தீவு வைத்தியசாலை கட்டில்களுக்கு பூச்சு பூசுதல்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் நிமித்தம் 59 வது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 592 வது பிரிகேட் படையினரால் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அவசரகாலத்தில் பயன்படுத்தகூடிய வகையில் 30 இரும்பு கட்டில்களுக்கு பூச்சுபூசப்பட்டது.

இப் பூச்சு பூசிய கட்டில்கள் 592 வது பிரிகேட் தளபதி கேணல் சமிந்த ஆராச்சிகே அவர்களின் முன்னிலையில் வைத்தியசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சமூக நலத்திட்டம் 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யு.டி.சூரியபண்டார அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன.