Header

Sri Lanka Army

Defender of the Nation

01st July 2021 09:39:30 Hours

மேலும் 1,864 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்

இன்று காலை (01) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,864 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 78 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள். ஏனைய 1,786 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமாக 365 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன், 254 தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில், 221 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில், ஏனைய மாவட்டங்களில் 946 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று காலை (01) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 259,088 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 152,432 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.

இன்று (01) காலை 0600 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,481 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர். ஜூன் மாதம் (29) இலங்கைக்குள் 47 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 31 பெண்களும் 16 ஆண்களும் அடங்குவர்.

இன்று (01) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 73 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,588 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (01) காலை 0600 மணி வரையான காலப்பகுதியில் (கடந்த 24 மணி நேரத்தில்) 30 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 896 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.

இன்று (01) காலை முதல் யாழ் மாவட்ட கிராம சேவக பிரிவுகள் புங்குடுதீவு பொலிஸ் பிரிவில் கல்லித்திரேரு மற்றும் கலவந்தலாவ காரைநகர் கிராமசேவகர் பிரிவு, கண்டி மாவட்டத்தில் கண்டி பொலிஸ் பிரிவில் சுதுவும்பொல - மேற்கு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவில் உள்ள வெலமடபரகம கிராம சேவகர் பிரிவு ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.