01st July 2021 09:38:30 Hours
பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் 51 வது படைப்பிரிவின் 513 வது பிரிகேடினரால் சங்கானை பகுதியில் அமைந்துள்ள முருக மூர்த்தி கோவில் , யாழ். வதலியடிப்பு வைரவர் கோவில் மற்றும் முருகன் கோவில் வளாகங்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை (25) சிரமதான பணிளை முன்னெடுத்தனர். இப் பணிகள் 51 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தீபல் புஸ்செல்ல அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 513 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மொஹமட் பாரிஸ் அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டன.
இந்த திட்டமானது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 11 வது இலங்கை இலேசாயுதன காலாட் படை மற்றும் 16 வது கெமுனு ஹேவா படையினரால் மேற்கொள்ளப்பட்டன.