25th June 2021 08:30:46 Hours
61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகேயின் வேண்டுகோளுக்கு இணங்க சில நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பில் புதன்கிழமை (23) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஜெர்மனியில் வசிக்கும் திரு நரேஷ் சமரவிக்ரம மற்றும் திரு மல்கம் பெரேரா மற்றும் தர்சன கருணாரத்ன உள்ளிட்ட 'ஆயுபோவன்' இலங்கை அமைப்பின் உறுப்பினர்கள் 200 என்ஆர்பி முககவசங்கள் மற்றும் 12 ஒக்சிமீட்டர்களையும் வைத்தியசாலை பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கினர். மேலும் திருமதி துமிந்த கயானி மஹாஹெட்டிகேவும் அவசர தேவைகளுக்கு உதவுவதற்காக ஒரே நேரத்தில் 12 ஆக்சிமீட்டர்களை நன்கொடையாக வழங்கினார்.
நன்கொடை அளித்த மருத்துவ உபகரணங்கள் கராபிட்டி போதனா வைத்தியசாலை, ருஹுனு தேசிய கல்வி நிறுவன இடைநிலைப் பராமரிப்பு நிலையம் , ஆராச்சிகட்டுவ வைத்தியசாலை மற்றும் ஹபராதுவ மீபே வைத்தியசாலை ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
61 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு, 613 வது பிரிகேட் தளபதி மற்றும் சில அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.