Header

Sri Lanka Army

Defender of the Nation

25th June 2021 09:00:39 Hours

கிளிநொச்சியில் ஐந்து புதிய வீடுகளின் நிர்மாண பணிகள் இடம்பெறுகின்றன

கிளிநொச்சி கஷ்டப் பிரதேசங்களில் வசிக்கும் ஐந்து குடும்பங்களுக்கான புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. சமூகத்தின் மேம்பாடு கருதி பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பொது மக்களுக்கும் படையினருக்கும் இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

57 படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன மற்றும் 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர ஆகியோரின் மேற்பார்வையிலும் 572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால மற்றும் 573 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும ஆகியோரின் வழிகாட்டலுடனும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களுடைய ஆசிர்வாதத்துடனும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

7 வது இலங்கை இலேசாயுத காலாட் படை, 6 வது இலங்கை சிங்கப் படை, 9 வது இலங்கை சிங்கப் படை, 9 விஜயபாகு காலாட் படை மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படை சிப்பாய்கள் ஒன்றிணைந்த்து பொது மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் இந்த திட்டத்தை கிளிநொச்சியில் முன்னெடுத்து வருகின்றனர்.