25th June 2021 13:00:39 Hours
111 பிரிகேட் தலைமையகத்தினால் 24 ம் திகதி பொசன் போயா தினத்தை முன்னிட்டு கம்பளை பகுதியில் உதவியற்ற நிலையில் இருப்போருக்காக சமைத்த உணவு பொதிகளை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க அவர்களுடைய குழுவினரால் கம்பளை குருந்துவத்தை பகுதியில் பொது இடங்களில் இருக்கும் யாசகர்களுக்கு மேற்படி உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
குறித்த பகுதியிலுள்ள தொழிலதிபரான திரு.குமா வீரசூரிய அவர்களின் நிதி உதவியில் படையினரால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் சமைத்த உணவு பொதிகளுடன் தண்ணீர் போத்தல்களும் விநியோகிக்கப்பட்டன.
11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களாலும் மேற்படி நற்பணிக்கு ஆதரவு வழங்கப்பட்டது.