Header

Sri Lanka Army

Defender of the Nation

20th June 2021 06:00:58 Hours

சனிக்கிழமையன்று 47 மரணங்கள் பதிவு

இன்று காலை (21) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் of 2,028 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 20 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள். ஏனையவர்கள் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள். அவர்களில் அதிகமாக 307 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 302 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 253 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 1,146 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (21) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 239,688 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் , 133,885 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.

இன்று (21) காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 1,996 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர். ஜூன் மாதம் 19 திகதி இலங்கைக்குள் 47 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 20 பெண்களும் 27 ஆண்களும் அடங்குவர்.

இன்று (21) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 72 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,751 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (21) காலை வரையான காலப்பகுதியில்(கடந்த 24 மணி நேரத்தில்) 10 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 246 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.

இன்று (21) காலை வரை 51 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணக்கட்டுப்பாடுகள் இன்று (21) காலை 04.00 மணிக்கு நீக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் (23) 10 மணிக்கு பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்படும்.