Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2021 20:58:51 Hours

மேலுமொரு காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 112 பிரிகேடினர் மும்முரம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 112 வது பிரிகேட் படையினர் வியாழக்கிழமை (17) பதுளை - பண்டாரவளை, தோவ அம்பதாண்டேகம மலைப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (13 ) வேவகொட மலைப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலும் அதே படையினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

அம்பதாண்டேகம மலைத்தொடரில் பாதிக்கப்பட்ட பகுதியை விரைவாக சென்றடைந்த படையினர் , சில மணிநேரங்களுக்குள் வனப்பகுதி முழுவதிலும் தீப்பரவல் ஏற்படுவதை தடுத்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா அவர்களின் அறிவுரைக்கமைய, 112வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திஸாநாயக்க, 11 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.