09th June 2021 10:21:38 Hours
கொவிட் 19 வைரஸ் தொற்றின் திடீர் அதிகரிப்பிற்கு முகம் கொடுக்கும் வகையில் கொவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஒர் இடைநிலை பராமரிப்பு மையமாக மாத்தறை கம்புருபிட்டிய அதபான வைத்தியசாலையில் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டமானது 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இடம் பெற்றது.
613 வது பிரிகேட்டின் படையினர் சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த கட்டுமான பணிகளை மேற்கொள்கின்றனர்.
பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் நாடளாவிய ரீதியில் கட்டில்களின் எண்ணிக்கை மற்றும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களை அதிகரிக்கும் சிந்தனையின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி விக்கும் லியனகே அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்டதாக 30 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குறித்த விடுதி நிர்மாணிக்கப்பட்டது.
கொவிட் 19 வைரஸ் தொற்றின் திடீர் அதிகரிப்பிற்கு முகம் கொடுக்கும் வகையில் கொவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஒர் இடைநிலை பராமரிப்பு மையமாக613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு அவர்களின் கண்கானிப்பில் படையினரால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.