07th June 2021 15:05:26 Hours
வெல்லச தொலைக்காட்சி YouTube அலைவரிசையின் அணுசரணையில் ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி கந்தானை பகுதிகளில் வசிக்கும் தேவையுடையவர்களுக்கான இலவச காய்கறிகள் மற்றும் பழங்கள் நன்கொடையளிக்கும் நிகழ்விற்கு மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 வது படைப் பிரிவில் உள்ள 141 வது பிரிகேட் படையினர் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
இந்த திட்டத்தின் கீழ், 110 காய்கறி பொதிகள் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. அதற்கு மேலதிகமாக மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 90 காய்கறி பொதிகள் கந்தானனை புனித செபஸ்டியன் தேவாலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த திட்டமானது மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 14 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா ஆகியோரின் அறிவுறுத்தலின் கீழ், 141 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே அவர்களின் மேற்பார்வையில் மேற் கொள்ளப்பட்டது.