05th June 2021 17:37:43 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் 591 வது பிரிகேட்டின் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படை படையினர் திங்கட்கிழமை (31) வற்றாப்பளை கிராம சேவையாளர் பிரிவில் சலூன் சந்திக்கு அருகிலுள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்தனர்.
படையினர் சிறுவர் பூங்காவை சுத்தம் செய்து பூங்காவில் உள்ள அனைத்து உபகரணங்களையும் அர்ப்பணிப்புடன் புதுப்பித்தனர். இந்த நடவடிக்கை 591 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பெரேரா மற்றும் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ, 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.டி.சூரியபண்டார ஆகியோரது ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.