04th June 2021 07:30:45 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 62 வது படைப்பிரிவின் 623 வது பிரிகேடின் 11 வது கெமுனு ஹேவா படையினர் உச்சில்கட்டி கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு குடிநீரை வழங்கினார். 62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டி. பி. உபாலி குணசேகர அவர்களின் அறிவுறுத்தலின் படி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை 62வது படைப் பிரிவுக்கு உட்பட்ட படையினர் கொவிட்-19 விரைவாக பரவுவதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் திட்டத்தை அரச சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நடத்தினர்.
623 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜி பிரபாத் கொடிதுவக்கின் மேற்பார்வையில் இப்பகுதியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.