04th June 2021 17:00:11 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் தொற்றாளர்களுக்கான ஒர் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றப்பட்டது.
சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படை படையினர் இந்த திட்டத்தை முன்னெடுத்ததுடன் 2021 மே மாதம் 31 ம் திகதி உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடிரென ஏற்படும் அதிகரிப்புக்களை சமாளிக்க கூடிய வகையில் இடைநிலை பராமரிப்பு நிலையங்களின் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கிழக்கு பாதுப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதிதாக மாற்றியமைக்கப்பட்ட இடைநிலை பராமரிப்பு நிலையம் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கொண்ட 70 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டு 22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களினால் முறையாக சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 223 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சாந்த பெரேரா அவர்களின் நேரடியான கண்காணிப்பில் படையினரால் திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.