04th June 2021 04:21:39 Hours
2021 மே மாதம் 28 ம் 29 ம் திகதிகளில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட்டின் 3 வது கெமுனு ஹேவா படையினர் அண்மையில் விபத்திற்குள்ளாகி பாதிப்படைந்த கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருட்களை சேகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டனர்.
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகேவின் மேற்பார்வையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே மற்றும் 613 வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.