Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2021 07:42:41 Hours

புத்தாண்டு கொத்தணியில் 98,534

இன்று காலை (04) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,297 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 30 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த உள்நாட்டவர்களும் 03 பேர் வெளிநாட்டவர்களும் ஏனையவர்கள் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் அவர்களில் அதிகமான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் அறியப்பட்டுள்ளதுடன், அறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 648 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் 630 தொற்றாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 409 பேரும் அறியப்பட்டுள்ளனர். 1,577 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (04) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 195,843 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 98,534 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள்.

இன்று (04) காலை 0600 வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 1,683 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர். இன்று (04) காலை 0600 வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கைக்குள் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மூவர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,608 ஆகும்.

இன்று (04) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 56 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,553 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (04) காலை 0600 வரையான காலப்பகுதியில் 11 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 259 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.

மேலும் இன்று (04) காலை இவ் அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவுகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், பயணத்தடையானது மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கும்.