02nd June 2021 22:11:09 Hours
65வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் படி 652 வது பிரிகேட் படையினர் மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினர் துனுக்காய் பகுதியில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோகிக்கும் திட்டத்தை திங்கட்கிழமை (31) தொடங்கினார்.
கொவிட் 19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அறிந்த 652 பிரிகேட் மற்றும் 10 இலங்கை இலேசாயுத காலாட் படை படையினர் தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி இந்த நிவாரணப் பொதிகளை ஏற்பாடு செய்தனர்.
652 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய ஹேரத், 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படை கட்டளை அதிகாரி, 652 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் படையினர் விநியோக திட்டத்தில் பங்கேற்றனர்.