26th May 2021 06:09:33 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட்டின் 14 (தொ) கெமுனு படையும் முதலாவது பொறியியலாளர் சேவைப் படையினரும் இணைந்து பிராந்தியத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பினை எதிர்கொள்ளும் பொருட்டு அக்மீமன ருஹுணு கல்வியற் கல்லூரியினை செவ்வாய்க்கிழமை (25) இடைநிலை பராமரிப்பு நிலையமாக மேம்படுத்தினர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய வழிகாட்டுதலின் படி கொவிட் நோயாளிகளுக்கு அவசர நிலைமைகளில் சிகிச்சை அளிக்கும் பொருட்டு அக்மீமன வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இந்த இடைநிலை பராமரிப்பு நிலைய திட்டம் படையினரால் நிறைவு செய்யப்பட்டது.
இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 61வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே மற்றும் 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் திட்டம் தொடங்கப்பட்டது.