Header

Sri Lanka Army

Defender of the Nation

27th May 2021 23:00:31 Hours

மருத்துவ நிபுணர்கள் சீதுவை இடைநிலை பராமரிப்பு நிலையத்தின் தாய்மார் மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்கான வசதிகள் தொடர்பில் ஆராய்வு

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் நிபுணர் எச்.எஸ்.ஆர் பெரேரா தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் தொடர்பான சிரேஷ்ட வைத்திய நிபுணர்களின் ஒருங்கிணைந்த குழு, செவ்வாய்க்கிழமை (25) இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் மேம்படுத்தப்பட்ட சீதுவை இடைநிலை பராமரிப்பு நிலையத்தின் தாய்மார் மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்கான வசதிகள் பணிகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது வைத்திய குழுவினரை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் வரவேற்றதுடன், குடும்ப நல பணியகத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் திருமதி சித்ரமலி டி சில்வா, குழந்தை நல வைத்திய நிபுணர் பேராசிரியர் வைத்தியர் சமன் ரஜிந்திரஜித், குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் சுரந்த பெரேரா, இலங்கையின் மகப்பேற்று வைத்திய கழக தலைவர் வைத்தியர் சனத் லனரோல் ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை திங்கட்கிழமை (24) சந்தித்தனர். அத்தோடு வைரஸ் பாதிப்புக்கு உள்ளான கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க மாற்று இடத்தைக் நிர்மானிப்பதற்காக ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் மூலோபாய வழிகாட்டுதலை அவர்கள் நாடியிருந்தனர்.

இதன் விளைவாக ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவசர திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட 1200 கட்டில்களுடன் கூடிய இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் ஒரு வாட்டினை அல்லது அவசர சிகிச்சை உபகரணங்கள் வசதிகளையும் கொண்ட பகுதியை பரிந்துரை செய்தார். குறித்த பகுதியில் வைத்திய உபகரணங்கள் மற்றும் தாய்மார் மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்கு அவசியமான பொருட்கள் குறைந்த அளவில் காணப்பட்டதுடன், பிரெண்டிக்ஸ் கிரீன் பிளாண்ட் நிறுவனத்தின் நன்கொடை உதவியால் குறித்த பகுதியில் மிகப் பெரிய கொவிட் – 19 வைத்தியசாலை கட்டமைக்கப்பட்டது.

மருத்துவ நிபுணர்கள் குறித்த பகுதியை மேற்பார்வை செய்த வேளையில் அவ்விடத்திற்கு சுகாதார சேவைகள் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இடைநிலை சிகிச்சை மையத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அத்தோடு வைத்திய நிபுணர்கள் மற்றும் திருமதி சுஜீவா நெல்சன் அவர்களுடன் இணைந்து குறித்த வளாகம் முழுவதையும் அவர் மேற்பார்வை செய்தார்.

செவ்வாய்க்கிழமையன்று குறித்த இடத்திற்கு வருகை தந்த வேளையில் வார்டுகளை உன்னிப்பாக மேற்பார்வை செய்ததுடன், அதற்கான மனித வள தேவைகள், தாதியர்கள் மற்றும் வைத்திய உதவியாளர்கள் உள்ளடங்களாக வார்டுகளின் ஏனைய தேவைப்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தனர்.

14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் கேணல் துஷார பாலசூரிய, சீதுவை இடைநிலை பராமரிப்பு நிலையத்தின் தளபதி கேணல் யோஹான் பெர்னாண்டோ, மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.