24th May 2021 17:00:01 Hours
14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் 141 பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க ஆகியோருடைய பங்கேற்புடன் அவசர நிலைமைகளின் போது நிலைமைகளின் போது கையாள அவசியமான வகையில் வௌ்ளிக்கிழமை (25) மல்வானையிலுள்ள உபிதிதகம பகுதியில் வெளிக்கள மோட்டார் படகோட்டும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
ஆரம்ப நிகழ்வில் 6 வது இலங்கை பீரங்கிப் படையின் நான்கு வீரர் குழுவும் , 8 வது இலங்கை இலேசாயுத கலாட்படை பிரிவின் 8 பேர் அடங்கிய குழுவினரும் பங்குபற்றியதுடன், 2 வது விஷேடப் படையின் படகோட்டும் பிரிவின் நன்கு தேர்ச்சி பெற்ற 4 நெறியாளர்களும் படையினருடைய திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகளை அளித்தனர்.
மேற்படி பிரிகேடின் அடுத்த குழுவினருக்கும் 2 வது பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் அதன்போது லெப்டினன் கேணல் கே.வை.பிரியதர்ஷன 5 நாள் நீண்ட அனுபவத்துக்கான பயிற்சிகளுக்கு கட்டளையிட்டார்.