Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2021 19:00:01 Hours

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு

இன்று காலை (26) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,728 பேர் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 21 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் என்பதுடன் ஏனைய 2,706 பேரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள். அவர்களில் அதிகமாக 558 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 522 பேர் கொழும்பு மாவட்டத்திலும் 476 பேர் களுத்துறை மாவட்டத்திலும், 1,150 பேர் ஏனைய மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (26) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 169,899 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 72,868 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள் என்பதோடு அவர்களில் 141,174 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 26,226 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு புதன்கிழமை (26) காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 1,228 பேர் குணமடைந்து பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 05 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி (26) காலை வரையில் நாட்டில் பதிவான கொவிட் – 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆக பதிவாகியுள்ளது.

புதன்கிழமை (26) காலை 88 பேர் 06 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் இன்று காலை (26) 67 ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,287 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று (26) காலை இவ் அறிக்கை வெளியிடப்பட்ட வேளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டிருக்காமையால் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. பயணத்தடையானது மீள் அறிவிப்பு வரையில் நீடிக்கப்படும்.