Header

Sri Lanka Army

Defender of the Nation

11th May 2021 18:33:16 Hours

இன்று நல்லிரவு (11) முதல் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு

ஜனாதிபதியின் ஆலோசனையின் படி மாகாணங்களுக்கு இடையேயான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இன்று (11 மே 2021) நள்ளிரவு முதல் வந்து 2021 மே 30 நள்ளிரவு வரை நடைமுறையில் அதே வேளை அத்தியாவசிய சேவைகளுக்கு இக் கட்டுப்பாடு பொருந்தாது என பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அதே வேளை கள நிலமையை கருத்திற் கொண்டு மாவட்டங்களுக்கு இடையேயான பயணத் தடை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வைரஸ் வேகமாக பரவுவதைத் தணிப்பதற்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அனைத்து நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் வைத்திய நிபுணர்களுடன் விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் திங்களன்று (10) ஜனாதிபதி இதற்கான அனுமதியினை வழங்கியிருந்தார். இந்த தேசிய கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தல், கூட்கூட்டம் கூட்டுதலை தவிர்த்தல், வீட்டிலேயே இருத்தல் என்பவற்றை கடைபிடிக்குமாறு ஜெனரல் ஷவேந்திர சில்வா பொது மக்களை கேட்டுக்கொண்டார்.