05th May 2021 19:40:17 Hours
மூன்று தசாப்தங்களும் மேலாக இராணுவத்திற்கு அர்ப்பணிப்பு சேவையாற்றிய கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் 11 வது படைப்பிரிவின் தளபதியாக இருக்கையில் ஓய்வுபெறுவதை இட்டு பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (5) தனது அலுவலகத்திற்கு அழைப்பித்து தனது பாடை்டுக்களை தெிவித்துக் கொண்டார்.
சுருக்கமான உரையாடலின் போது ஜெனரல் சவேந்திர சில்வா பழைய நினைவுகளை நினைவு கூர்ந்ததுடன் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் சாரத சமரகோனுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், அவர் ஓய்வுபெறுவதற்கு முன்னர் இராணுவம் மற்றும் கஜேபா படையணி ஆகியவற்றில் பல முக்கிய நியமனங்களில் பணியாற்றியுள்ளார்.
மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் ஒரு போர்க்குணமிக்க போர்வீரனாக மாவிலாறு முதல் புதுமாத்தளன் வரையிலான மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றிகரமான உச்சக்கட்டத்திற்கு அயராது பங்களித்தவர்களில் ஒருவர். பயங்கரவாதிகளுக்கு எதிரான 58 வது படைப்பிரிவு தாக்குதல்களிலும் பெருமளவில் பங்கேற்றவர்
விடைப்பெறும் சிரேஸ்ட அதிகாரி தனது தளபதியின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பிற்கு நன்று தெரிவித்தார். சந்திப்பின் முடிவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெறுபவருக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசும் வழங்கினார்.