09th April 2021 16:04:40 Hours
இராணுவ வீரர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் வௌ்ளிக்கிழமை (09) பனாகொட இராணுவ முகாம் வளாகத்தில் புதுபிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கான விடுமுறை விடுதியானது, நிருவாக மற்றும் விடுதிகள் பணிப்பகத்தின் கோரிக்கைக்கு அமைய திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ அவர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் மத சடங்குகளுடன் நிகழ்வு ஆரம்பமானதுடன் பெயர் பலகைகளை திறந்து வைத்து ரிப்பன்களை வெட்டி திறந்து வைத்த தளபதி விடுதியின் உற்பகுதிகளை பார்வையிட்டார்.
இராணுவ பல்வேறு பிரிவுகளுக்குள் சேவையாற்றும் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு அவசியமான வசதிகளை மேம்படுத்தி கொடுக்குமாறு இராணுவ தளபதியால் விடுக்கப்பட்ட அறிவுரைக்கமைய பாழடைந்த நிலையில் காணப்பட்ட விடுமுறை விடுதி புதுப்பிக்கப்படத்துடன் அதனை திறந்து வைத்த தளபதி சிரேஸ்ட அதிகாரிகளுடன் இணைந்து அவற்கை மேற்பார்வை செய்தார்.
இந்த நிகழ்வில் உபகரண பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, வேளாண்மை மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இந்திராஜித் கந்தனாராச்சி, காணி மற்றும் விடுதிகள் பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த சில்வா, பொறியியல் சேவைப்பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த குமார மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்