Header

Sri Lanka Army

Defender of the Nation

07th April 2021 17:27:34 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் ஓய்வுபெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவ தளபதி வாழ்த்து

இலங்கை இராணுவத்தில் பெருமைமிக்க படையணிகளின் ஒன்றான இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ அவர்கள் 35 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றிய ஓய்வுபெற்று செல்லும் முன் இன்று (7) இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவ தளபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

ஓய்வு பெற்று இந்த அதிகாரி, 34 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றியதுடன் இவர் இராணுவ போர் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த ஒரு போர்க்குணமிக்க அதிகாரியாவர். இவரின் அர்ப்பணிப்பு சேவையை கௌரவ படுத்தி பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது நன்றிகளை தெரிவித்தார்.

1986 ஆம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்த இவர் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதிகளில் காலாட்படை வீரராக பங்கு வகித்தமைக்கு இராணுவத் தளபதி பாராட்டு தெரிவித்தார். ஓய்வு பெற்றும் செல்லும் சிரேஷ்ட அதிகாரி அவர்கள் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியாகவும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக பணியாற்றியமைக்கு அவரின் சேவையை பாராட்டிய ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் ஒரு முக்கிய நியமனத்தைக் கொண்டிருந்தார், மேலும் அவரது வாழ்க்கை முழுவதும் அவரது படையணிக்கு பலமாக இருந்தார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரி அவர்கள் இராணுவ தளபதியின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் நினைவு கூர்ந்தார். சந்திப்பின் நிறைவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. latest jordans | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf