07th April 2021 16:57:07 Hours
இலங்கை சிங்கப் படையின் சிரேஸ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவல இராணுவத்தில் மூன்று தசாப்தங்களுக்கு மேலான பாராட்டத்தக்க சேவையின் பின்னர் ஓய்வுபெற்றுவதையிட்டு இராணுவத் தளபதியும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தனது பாராட்டுக்களை இன்று (7) காலை தனது அலுவலகத்தில் தெரிவித்துக் கொண்டார்.
இச் சந்திப்பின் போது ஓய்வுபெற்ற தினத்தன்று பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானிகாரியாலயத்தில் இராணுவ பதவி நிலைப் பிரதானியான சிங்கப் படையின் காலாட் படை வீரரான மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவல அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக பாராட்டப்பட்டார். இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரியின் தொழில் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன் சிங்கப் படையின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு அவர் ஆற்றிய பங்கை நினைவு கூர்ந்தார்.
இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பல்லாவலவுடன் அவரது எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். இறுதியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜெனரல் அஜித் பல்லாவலவின் சேவையில் ஓய்வு பெறுவதை பாராட்டி ஒரு சிறப்பு நினைவு பரிசு வழங்கினார்.
வெளியேறும் சிரேஸ்ட அதிகாரி தனது தளபதியின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து கிடைத்த ஊக்கத்தை நினைவுப்படுத்தினார். bridgemedia | Nike Shoes